ஒரு மருத்துவரை
நம்பினால் கடைசிவரை நம்பி மருந்து சாப்பிட வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு
கால் வைத்து மருந்து சாப்பிடக்கூடாது. முழுமையாக நம்ப வேண்டும்.
உன்னால் முடியும்
தம்பி.... ஒரு கால் பந்து வீரர் உலக சாதனை படைக்க வேண்டும் என்று சாதனை படைத்து சாதிக்க
வேண்டும். என்று வைராக்கியம் கொண்டார். இவருடைய துரதிருஷ்டம் மூட்டு வாதம் அலற்ச்சி
நோய் ஏற்பட்டுவிட்டது. படுக்கையில் படுத்துவிட்டார். எழுந்து நடக்கக் கூட முடியவில்லை.
கடுமையான சோதனையில் மாட்டிக் கொண்டார்.
ஒரு
மருத்துவதை நியமித்து அவருக்குத் தேவையான பணம் செலவு செய்து
என்னை நல்ல மருந்து கொடுத்து
குணமாக்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.இது போலவே மருத்துவர்
நல்ல மருந்துகள் அளித்தார். ஒரு வருடத்தில் குணமாக்கி
விடுவேன் என்று மருத்துவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் கால்
பந்து வீரர் விடா முயற்சியும் மிகவும்
தன்னம்பிக்கையுடன் இருந்தார். தான் இந்த கொடிய
நோயிலிருந்து சீக்கிரம் எழுந்து கால் பந்து விளையாடி
சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அதே
சிந்தனையில் அல்லும் பகலும் சிந்தித்துக்கொண்டு இருந்தார்.
மருத்துவர்
ஒரு மடங்கு சொன்னால் இவர் நூறு மடங்கு
பத்தியத்துடன் பாதுகாப்புடன் இருந்தார். சொல்லி வைத்தது போல ஆறே மாதத்தில் நோய் குணமாகிவிட்டது
மற்றும் ஆறு மாதம் நடந்தும் ஓடியும் பழகி நல்ல சத்துண்ண உணவுகள் சாப்பிட்டு விடாமுயற்சியுடன்
மனம் தளராமல் செயல்பட்டார். அவர் சொன்னது போலவே மறுபடியும் கால்பந்து போட்டியில் கலந்து
கொண்டு தங்கப் பதக்கம் பெற்று மகிழ்ந்தார். எல்லாம் விடாமுயற்சி சாதனை படைக்க வேண்டும்
என்ற துடிதடிப்பு, இது போல நீங்களும் சாதனை படைத்து இந்த நோயிலிருந்து தப்பிக்க வேண்டும்
என்ற ஆர்வத்துடன் செயல்படவேண்டும்.
தாய்மார்கள்
உங்கள் மகன் திருமணத்தை பார்க்கவேண்டும். நாம் முன்னின்று நம் வீட்டு திருமணத்தை முடிக்க
வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அதே உற்சாகத்துடன் இருக்க வேண்டும். அதே
துடிதுடிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த கொடிய நோயிலிருந்து நீங்கள் தப்பிக்க
வேண்டும், சாதனை புரிய வேண்டும். ஐயோ, இந்த நோய் என்னை விட்டுப் போகாது, நான் இறந்து
விடுவேன் என்று மனதளர்ச்சி கொண்டால் நோய் குணமாகவே ஆகாது.
எதற்காக மன
தளர்ச்சி அடைகிறீர்கள்? நோய் குணமாக அது அதன் வழியை மேற்கொள்ளும்போது நீங்கள் ஏன் தளர்ச்சி
அடைகின்றீர்கள்? தளர்ச்சிக்கு பதிலாக முயற்சியுடன் இருங்கள். இதுபோலவே ஆண்களுக்கு நோய்
உள்ள போது நம் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மருமகள் மாதமாக இருக்கிறார்கள். அடுத்த
சில மாதங்களில் குழந்தை பிறக்கப்போகின்றது. நாம் இருந்து குழந்தையை, நம் பேரப்பிள்ளையைப்
பார்க்க வேண்டும். நாம் அவனை சிறப்பாக வளர்க்க வேண்டும். நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும்
என்ற எண்ணம் உங்களுக்குள் ஆணித்தரமான இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த நோய் குணமடையும்.
ஐயோ என்னால்
முடியவில்லை, நான் இறந்துவிடுவேன், எனக்கு செலவு செய்யாதீர்கள் என்று மனத்தளர்ச்சியுடன்
நீங்கள் சொன்னால்,இந்த நோய் உங்களை விட்டு போகவே போகாது. இந்த கொடிய பேய் என்ற நோய்
உங்களை நன்றாக கட்டி அணைத்துக் கொள்ளும். விடவே விடாது.உங்களை விட்டு போகாது.
நான் இந்த நோயை
பேய் என்று சொல்லுகின்றேன். நோய் என்ற பேய் இது பிடித்துக்கொண்டால் போகவே போகாது.இந்த
நோயை அசைத்துக்கூட பார்க்க முடியாது. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நோய் சற்று குணம்
கிடைத்தால் பரவாயில்லை. எவ்வளவோ பரவாயில்லை. சீக்கிரம் குணமாகிவிடும் என்ற முழு நம்பிக்கையுடன்
இருங்கள். முழு முயற்சியுடன் இருங்கள்.
மனதிலே வேதனை
சலிப்பு ஏமாற்றம் தோல்வி இருக்கவே கூடாது. இதற்கு
பதிலாக முயற்சி சாதனை இருக்கவேண்டும். ஒரு சிறிய நாலுகோல்
வண்டியில் உட்கார்ந்து கால் இல்லாதவன் கைகளை கால்களைப் போல அசைத்து வண்டியை ஓடச்செய்து
பிச்சை எடுத்து தன் மனைவி மக்களை காப்பாற்றுகின்றான். கால் இல்லாதவர்கள் ஓடி வேலை செய்து
தன் வாழ்க்கையை
செவ்வனே நடத்துகிறார்கள்.கை விரல்களில் குஷ்டம் ஏற்பட்டும்,
தான் வாழ்ந்து தன் குழந்தைகளை காப்பாற்றுகின்றான் குஷ்ட வியாதி
பிச்சைக்காரன்.
சற்று சிந்தித்துப்பாருங்கள்.
ஒன்றும் இல்லாதவன் வாழ்கின்றான். வானமே கூரையாக பூமியை பாயாகக் கொண்டு வாழ்கின்றவன்
வாழ்கின்றான். வாழ்கின்றான் என்று சொல்லக் கூடாது. வாழ்வாங்கு வாழ்கின்றான்.
இவ்வாறு சொத்துக்களை
வைத்துக்கொண்டு இவ்வாறு வசதிகளை வைத்துக்கொண்டு உடலில் எந்த உஷ்ணமும் இல்லாமல் இருக்கிற
நீங்கள் ஏன் மனத்தளர்ச்சி கொள்கிறீர்கள்? ஏன் தளரவேண்டும்?எதற்காக மனம் விடுகிறீர்கள்? ஏன் வருத்தப்படுகிறீர்கள்?
நேரம் டைம்
இப்போது சரியில்லை. ஜாதகம் பார்த்தாலும் அப்படித்தான் சொல்வார்கள். கிரகக்கோளாறுகள்
இப்போது ஜாதகப்படி டைம் சரியில்லை. அடுத்த குரு பெயர்ச்சி வரும்போது இந்த நோய் குணமாகிவிடும்
என்று சொல்வார்கள். அதன்படியே குணமாகிவிடும். இருக்கமுடியாது. யாரும் சதா காலம் அழுது
கொண்டேயாரும் சிரித்துக்கொண்டே
இருக்கமுடியாது. கெட்ட காலம் சில சமயங்களில் வரும் சுக்கிரம் உச்ச கட்டத்தில் வந்துவிட்டால்,
பணம் செல்வாக்கு உயர்வதுடன் நோய் சொல்லாமல் மறைந்துவிடும்.
இன்று அவன்
காட்டில் மழை பெய்கிறது. நாளை நம் காட்டில் மழை பெய்யும் என்ற முழு நம்பிக்கையுடன்
இருக்க வேண்டும்.நம் காட்டிற்கு மழை வராமலா போய்விடும். அவன் காட்டிற்கு மழை பெய்ததுபோல
நம் காட்டிற்கும் மழை பெய்யும், நம் காட்டிலும் அடுத்த ஆறாவது மாதம் வெள்ளாமை பயிர்
அறுவடை செய்யத்தான் போகிறோம் என்ற முழு நம்பிக்கை நம்முள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நாம் வாழ முடியும். வளரமுடியும்.
கருவரையிலிருந்து
கல்லறை வரை கவலைகள் தான் நோயை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் இளமையில் உடலை கட்டுத்திட்டத்துடன்,
மனக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க ஒவ்வொருவரும் மறந்து விடுகிறோம். இன்றோ அறுசுவை உணவு
அளவுக்கு மீறி உண்டு ஏராளமாக செலவு செய்து இன்றைய இன்பத்தை இன்றே அனுபவித்து விடுகின்றோம்.
நாளை நாம் இருப்பது
உறுதி இல்லை. இன்றே நாம் அனுபவித்துவிடுகின்றோம் என்று துள்ளித்திரிபவர்கள் உண்டு.
சரி
இன்று நாம்
வாழ்கின்றோம், நாளை நாம் வாழ்ந்தால் அதற்குரிய பணம் சக்தி இருந்தால்தானே பிழைக்கமுடியும்.
மனிதன் தான் வாழும் காலத்தில் நாளை ... நாளை என்ற மனநிலை இருந்து கொண்டே இருக்கவேண்டும்.
நாளை நாம் வாழ்ந்தால் நாலு பணம் நம் கையில் இருக்கவேண்டும். நாளை நாம் வாழ்ந்தால்,
நாம் சேமித்து வைத்த சக்தியைகாப்பாற்றி
வைக்க வேண்டும். நாளை நமதே... நாளை என்ற திட்டமிட்டு
வாழ்பவனே இந்த வையகத்தில் போற்றப்படுகின்றான். நாளை நமதே என்ற
திட்டமிட்டு வாழாதவனை இந்த வையகம் தூற்றப்படுகிறது,
காரி துப்புகிறது.வாழும் காலத்தில் நாலு பணம்சேர்த்து வைக்காது
வாழ்ந்த இவன் ஒரு மனிதனா? என்று தூற்றுகிறது.
கருவரையிலிருந்து
கல்லரை வரை மனிதனுக்கு கஷ்டம், கஷ்டம், தீராத கஷ்டம், நஷ்டம், ஏமாற்றம் கவலை இதுதான்
அவன் ஒவ்வொரு கால கட்டத்திலும் நேரடியாக சந்திக்கின்றான். நிறைய சொத்து இருந்தும்,
ஏமாற்றி சொத்தை ஒரு ரவுடி அபகரித்துக்கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் எத்தனை ஆயிரம் குடும்பங்கள்?
தொழிலில் கடன்
வாங்கி நஷ்டம் அடைந்து வாங்கிய திருப்பிக் கொடுக்கமுடியாமல் வாழ்கிறவர்கள் பணம் பலர்.திருமணத்திற்கு
வாலிப பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு திருமணம் ஆகாமல் கஷ்டப்படுகின்ற குடும்பங்கள் ஆயிரம்.
இதுபோல எத்தனையோ
கஷ்டங்கள் வெளியே சொல்லமுடியாத ஆயிரம், ஆயிரம். கஷ்டங்கள்,
கவலைகள் இல்லாத குடும்பமே இல்லை. இத்தனை சிறிய தலையை வைத்து உலக அளவு கவலையை இறைவன்
வைத்துவிட்டான். கை அளவு இதயத்தை வைத்துவிட்டு, கடல் அருவி போல கஷ்டங்களை வைத்துவிட்டான்.
நம்
கோயிலில் 1001 ஆயிரத்து ஒன்று சிவலிங்கத்தை வணங்குகின்றோம்.ஒரே கல்லில் 1001 சிவலிங்கத்தை
உருவாக்கிய அந்த கல் எத்தனை
லட்சம் முறை அடி வாங்கி
இருக்கும்.அந்த கல் பல
லட்சம் அடி வாங்கி உருவம்
அமைத்து பின் அந்த கல்
தெய்வீக கல்லாக மாறி நாம் இறைவணக்கத்திற்குரிய
தெய்வீக புனிதத் தன்மையைப் பெறுகிறது.
இதைத்தான்
இந்து அல்லாத பிற மதத்தினர் நம்மை
கேவலப்படுத்துவார்கள்.
கல் கடவுளை வைத்து
வணங்குகின்றார்கள் என்று கேலி
பேசுவார்கள்.
இந்த தெய்வீகக்கலை.
நோக்கத்துடன் தத்துவ
ரகசியத்தை அறிந்துகொள்ளவேண்டும்.
பிற
மதங்களை கேலி செய்யாதே என்று
அருள்மிகு இயேசு கிறிஸ்து கூறி இருக்கிறார்.பிற
மதங்களை கேவலமாக பேசாதே என்று அண்ணல் நபி ஸல் கூறி
இருக்கின்றார்.
அந்த
புனித கல்
தெய்ளீகமாகிறது. மனிதனும் தெய்வமாகலாம்.
புத்தர் தெய்வமாகவில்லையா? ஏயேசு தெய்வமாகவில்லையா? வள்ளலார் தெய்வமாகவில்லையா? அருணகிரிநாதர் தெய்வீக நிலை அடையவில்லையா? நக்கீரர்
தெய்வ அம்சத்தைப் பெற்றார். இவர்களுக்கும் கவலை இருந்தது. அந்த
கவலை எல்லாம் அன்று அன்று நாம் வீட்டை சுத்தப்படுத்தி
குப்பையை வெளியேற்றி வைப்பது போல அன்று அன்று
தோன்றுகின்ற குப்பையை நாம் நம் மனதிலிருந்து
கவலை என்ற குப்பையை வெளியேற்ற
வேண்டும்.
கவலைதான்
நோய்க்கு மூல காரணம். யார்
ஒருவன் இல்லாமல் இருக்கின்றானோ அவன் வாழ்வாங்கு கவலை
வாழ்வான்.கவலை இல்லாத மனிதன்
கல் போன்று மனஉறுதியுடன் இருப்பான்.
கவலை
இல்லாத மனிதன் கஷ்டங்களை வென்று காலங்களை வென்று வாழ்வான்.கஷ்டம், கவலை யாருக்குத்தான் இல்லை.
ஒரு அரசை ஆளும் மகாராஜாவுக்குக்
கூட கவலை, தீராத கவலை இருக்கின்றது.
அயல்நாட்டுக்காரன்
படை எடுத்து நம்மை அடிமை ஆக்கிவிடுவானே என்று தீவிரமாக கவலை உண்டு. அயல்நாட்டுக்காரன்
அடைபவர்களும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பாதுகாப்புடன் மன வலிமையுடன் இருப்பான்.
நாம்
கவலையை
நீங்கள் உங்கள் சக்தி கொண்டு ஓட்டி விரட்ட வேண்டும். அந்த பேய் உங்களை
அமுக்கி உங்களை வீழ்த்திவிடும். அந்த கவலை உங்களைக்
கண்டு பயப்பட்டு ஓட வேண்டும். கவலை,
கவலை, அதைக்கண்டு நீங்கள் பயந்து ஓடக்கூடாது.
இந்த
கொடிய கவலைக்கும் இந்த நோய்க்கும் என்ன
சம்பந்தம் இருந்தது என்றால்....நிறைய சம்பந்தம் இருக்கிறது. முதலில் கவலை ஆரம்பிக்கிறது. உடல்
இயங்குவதற்கு உஷ்ணம் தேவை. ஆக்கப்பணிகளுக்கு உஷ்ணம் மிக மிக தேவை.
கவலை சதா காலம் கவலைப்பட்டுக்கொண்டு
இருந்தபோது கவலையினால் உடலில் உஷ்ணநிலை பாதிக்கப்பட்டு சீதளம் ஏற்படுகிறது. இருக்க வேண்டிய அளவான உஷ்ணநிலை குறைகிறது.
கவலையின் போது
நாம் பலமாக அழாவிட்டாலும் மனதார மனம் விட்டு துயரப்படும்போது இருக்கவேண்டிய உஷ்ணம்
தானாகவே குறைகிறது. சீதளம் ஏற்படுகிறது. உஷ்ணம் குறைந்து உடல் ஜில் என்று ஆகிவிடுகின்றது.
இந்த ஜில் நாளடைவில் அதிகரிக்கின்ற போது இரத்த ஓட்டம் சீராக ஓடுவதற்குரிய வழிமுறைகள்
சீராக அமைவதில்லை.
இந்தக் காலங்களில்
மூட்டுக்காலில் வலி சாதாரணமாகத் தான் ஆரம்பிக்கின்றது. பின் இந்த மூட்டுவலி சிறுக சிறுக
தோன்றி நாளடைவில் நிரந்திரமான மூட்டு வலியாக அமைந்துவிடுகிறது.
இன்று வியாபாரத்தில்
நஷ்டம். விடாமுயற்சியுடன் மறுபடியும் வியாபாரம் செய்தால் இழந்த நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம்.
விடாமுயற்சியில் மறுபடியும் கொள்ளை லாபம் சம்பாதித்து வாழ்ந்து காட்டிவிடலாம்.
ஒருமுறை தோன்றிய
கடுமையான திட்டுவாத தோய் முற்றிவிட்டால் மறுபடியும் குறையுமா?உங்கள் மகள் திருமனம்
இன்று நடைபெறவில்லை. நாளை சிறந்த இடத்தில் நடைபெற்று விடுகிறது.
நேற்றைய மூட்டுவலி
இன்று பயங்கரமாக வளர்ந்து முதிர்ந்து விடுகிறது. அத்த பயங்கர வலி உடனே போய்விடு, போய்விடு
என்றால் போய்விடுமா?அது அது எப்போது என்ன என்ன நடக்குமோ, அதுதான் நடக்கும். நம் கையில்
ஒன்றும் இல்லை, எல்லாம் இறைவன் செயல்.
ஆனால் நாம்
எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் வருமுன் காப்போம் என்ற நிலையில் இருக்கவேண்டும்.அப்போதுதான்
நோம் நம்மைக் கண்டு நம்மைப் பிடிக்க பயப்படும்.
நாம் பயந்த
சோம்பேறி கோழையாக இருந்தால், இவல் ஏமாளி என்று நோய் நம்மை ஸ்ட்ராங்காக பிடித்துக்கொண்டு
ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிடும்.கவலையினால் நீங்கள் ஏதாவது வெற்றி கண்டு இருக்கிறீர்களா?
உங்கள் மகள்
திருமணத்தை நான் முன்னின்று நடத்துவேன்' என்ற வைராக்கியத்துடன் ஜாதி ஜனங்களுக்கு முன்பு,
நம் விரோதிகளுக்கு முன்பு நின்று நடத்திக் காட்ட வேண்டும். அந்த வைராக்கியம் வேண்டும்.
பயந்து பயந்து
கவலை அதிகரித்து, நீங்கள் வாழ்ந்தால், கவலையே
உங்களை கொன்றுவிடும். பின் உங்கள் மக்கள் அனாதைகளாகிவிடுகிறார்கள்.நீங்கள் இருந்து
செய்யவேண்டிய நல்ல காரியத்திற்கு பதிலாக வேறு யார் இருந்தாலும், நீங்கள் இருப்பதுபோல
இருக்குமா?
கணவனை இழந்த பெண்களுக்கு
இந்த நோய் அதிகமாகிறது.
காரணம் கணவனை நினைத்து நினைத்து சதா காலம் கவலை கவலை கவலை, இந்த கவலைதான் நோயை நாளுக்கு
நாள் சிறுக சிறுக அதிகரிக்கின்றது. கவலை அதிகரிக்க அதிகரிக்க நோய் அதிகரிக்கும், கவலையினால்தான்
நோய் தீவிரம் அடைகின்றது. கவலை சீதளத்தை உஷ்ணத்தை குறைக்கிறது. இதனால் இந்த நோய் நிரந்தரமாக
குடி கொண்டு மூட்டு அலற்ச்சி வாத நோயை உருவாக்கிவிடுகிறது. எச்சரிக்கின்றேன், எங்களுக்கு
வருகிற பெருவாரியான நோய்கள் கவலை மிகுதியினால் முற்றிய பின்புதான் என்னிடம் வருகிறார்கள்.
நோய் உடனே குணமாக்க நாங்களும் உங்களுடன் சேர்ந்து பெரும் சிரமத்தை மேற்கொண்டு பல மாதங்கள்
கழித்து நோயை குணமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
குடும்பத்தின்
ஆண் துயண இல்லையென்றால், குடும்பம் நடக்கவில்லையா....பெண்கள் கணவனை சதா காலம் நினைத்து
நினைத்து அதே கவலையில் கண்ணீருடன் இருப்பதினால் இந்த நோய் முற்றிவிடுகிறது. உட்கார்ந்தால்,
எழுந்திருக்க முடியவில்லை மயக்கம் தள்ளுகிறது சரியாக உணவு சாப்பிடுவதில்லை. இரவில் கவலையினால்
தூக்கம் சரியாக வருவதில்லை. நோய் சிறுக சிறுக ஆரம்பித்து முற்றிவிடுகிறது.
கோபுரத்தை தூரத்திலிருந்து
பார்க்கும்போது பெரிய வானளாவிய பெரிய கோபுரம் நம் கண்ணுக்கு தெரிகிறது. அதே சமயம் கஷ்டப்பட்டு
அந்த கோபுரத்திற்குள் சிறுக சிறுக நடந்து மேலே செல்லும்போது கோபுரத்தின் மேல் இருந்து
கீழே பார்க்கும்போது சாதாரணமாக தெரிவதுபோல
சாதாரண கவலையை
சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சாதாரண கவலையை மிகப் பெரிய கவலையாக எடுத்துக் கொள்ளலாம்.
சாதாரண கவலையை குப்பையை கூட்டி வெளியே எடுத்து வீசுவதுபோல வீசி எரியவும் செய்யலாம்.
எல்லாம் நம் கையில்தான் உள்ளது. மனதை அடக்க வேண்டும். கவலையினால்தான் இந்த நோய் அதிகரிக்கின்றது.
ஒரு குடும்பத்தில்
வீட்டின் தலைவனுக்கு வாத நோய் வந்து கை கால் வணங்காமல்
பாரிச வாதம் ஏற்பட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த குடும்பத்தின்
தலைவி இதைப் பார்த்து பார்த்து தன் கணவனுக்கு சேவை செய்து அதே கவலையில் மிகவும் கஷ்டப்பட்டுக்
கொண்டு இருந்தால், எங்கள் மருத்துவமனைக்கு வந்த அந்த குடும்பத் தலைவியை நாங்கள் பரிசோதனை
மேற்கொள்ளும்போது அந்த அம்மாவுக்கும் ஒரு சில நாட்களில் பாரிச வாதம் ஏற்படும் நிலையை
நாங்கள் தீவிர பரிசோதனையில் கண்டறிந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து தீவிர சிகிச்சையை
மேற்கொண்டு, அந்த தாயை காப்பாற்றினோம். நான் பட்ட கஷ்டம் ஏனக்குத்தான் தெரியும். இரத்தக்
கொதிப்பு அதிகமாகி, கைகால் விரல்களில் உணர்வே இல்லை. கவலையினால் ஹிஸ்டிரியா போல அந்த
அம்மா இருந்தால். அந்த மன நிலையை சமப்படுத்தி, ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் அவ்வளவு
கஷ்டப்பட்டேன். கவலையிலேயே இருப்பதனால் நேர நேரம் உண்பதில்லை. உறங்குவதில்லை. சதா அதே
எண்ணம், கவலை, ஏமாற்றம், துரதிருஷ்டத்தை நினைத்து நினைத்து சாப்பிடாமல் இரத்தக்குறைவு
உண்டாகிவிடுகிறது.
மனம் தைரியமாக
நேர நேரம் வீட்டில் செய்து வைத்ததை சாப்பிடவேண்டும். இதற்காக ஸ்பெஷல் மீல்ஸ் தேவை இல்லை.
ராகி கூல் ஒன்று போதுமே. ராகி கூல் இதற்கு நோயை குணமாக்கும் சக்தி இயற்கையாகவே இருக்கிறது.
றராகியை லேசாக
தண்ணீர் ஊற்றி ஒரு வெள்ளைத்துணியில் மூட்டை கட்டி நிழலில் வைத்தால் முளை கட்டிவிடும்.,
இதை நிழலில் உலர்த்தி புடைத்தால், வெள்ளை முளை தனியாக வந்துவிடும். கருப்பு தோல் வெளியேறிவிடும்.
இதை அரைத்து பத்திரப்படுத்திக் கொண்டு கஞ்சி வைத்து சாப்பிட்டால் மூட்டு வாத ரோகம்
ஏற்படாது. மூட்டு அழற்ச்சி நோய் உள்ளபோதும் இதை செய்து குறைக்கலாம்.
இதே முறையில்
சத்து மாவு செய்யும் முறையில் கூட நீங்கள் செய்து சாப்பிடலாம்.ராகி, கோதுமை, கம்பு,
பொட்டுக்கடலை, நிலக்கடலை, சோளம், (பார்லி மிக குறைவு). பணம் இருந்தால், பாதாம், முந்திரி,
சாரப்பருப்பு, பிஸ்தா முதலியவைகள் கூட சேர்க்கலாம்.
இவைகளை சம எடை
எடுத்து அரைத்து சூடான பாலில் கலந்து சக்கரை நெய் கலந்து சாப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு
சுவையாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை இந்த சத்து மாவை அதிகரிக்கும். அதே போல
நோய் உள்ளபோது அவசியம் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய் வெகு சீக்கிரம் குணமடைந்துவிடும்.
இந்த முறையை
நாம் ஏழைகளுக்குச்
சொல்லி ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றி இருக்கிறேன். சத்துமாவு+பால்+சக்கரை+ஒரு
டீஸ்பூன் நெய் இவைகளை ஒன்று கலந்து மாலட்டு முறையில் சாப்பிட்டு வரவும். இதற்கு எந்த
பத்தியமும் இல்லை. வளரும் குழந்தைகளுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தாராளமாக
சாப்பிட்டு வந்தால், ஊட்டசத்துடன் வளர்வார்கள். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பிறக்கிறது.
சத்துமாவு தயாரிக்கும்
முறை அதிக செலவு இல்லாத முறை ஆகும். 'வைத்தியனுக்கு கொடுப்பதைக் காட்டிலும் சத்து மாவுக்குக்
கொடு' என்ற புதிய பொன்மொழிக்கு இலக்கணம் வகுக்கலாம். சத்து மாவு உண்பதினால் இந்த மாதிரியான
நோய்கள் வராமல் தடுப்பு அணை போட்டு இந்த கொடியநோயிலிருந்து நீங்கள் தப்பித்து வாழலாம்.
சாதாரண ராகிக்கு ஒரு மடங்கு பவர் என்றால் முளை கட்டிய ராகிக்கு பத்து மடங்கு சத்து
அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாவை சாப்பிட்டால், வேறு எந்த நோயினாலும்
பாதிக்காமல் சக்தியுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம்.