Wednesday 7 September 2022

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: வல்லவனுக்கு வல்லவன் வல்லாரை

கீரைக்காரியிடம் வல்லாரை கீரை எது என்று சொல்லி வாங்கி வந்து இந்த கீரையை துண்டு இலைகளை ஒரு வடை சட்டியில் போட்டு நல்லெண்ணை சிறிது ஊற்றி தேங்காய், உப்பு, பட்டை காரம், சீரகம், சுக்கு, மிளகு, சிறு திப்பிலி, இவைகள் இரண்டு கிராம் சேர்த்து தக்காளி, வெங்காயம், மலைபூண்டு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி, அதை அம்மியில் வைத்து அரைத்து சட்டினி போல செய்து சுடு சோற்றில் போட்டு சிறிது நெய் கலந்து, நெய் இருந்தால் சேர்க்கவும். நெய் இல்லையென்றால் விட்டுவிடவும். காலை வெறும் வயிற்றில் சோற்றில் போட்டு கலந்து சாப்பிடவும். இப்படி வல்லாரை கிடைக்கும்போதெல்லாம் சட்டினி முறையாக செய்து சாப்பிட்டால் இந்த நோய் கண்ட்ரோல் ஆகும்.

 

அது மட்டும் அல்ல, இந்த நோய் அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. இந்த முறை செய்யும்போது சேர்த்துக்கொள்ளலாம். மூட்டு வலி அதிகமாய் மூட்டில் வீக்கம் இருந்தால்தான் உப்பு குறைவாக சாப்பிடவேண்டும். பார்லி அரிசி கஞ்சியில் சக்கரை பால் கலந்து தினமும் 2,3 வேளை சாப்பிட்டு உப்பு வந்தால், மூட்டு வீக்கம் நாளுக்கு நாள் குறைந்துவிடும். வல்லானா சக்தியை அளிக்கும். நரம்புகளுக்கு முறுக்கேறும். ஆண்மை வீரிய சக்தியை அளிக்கும் மூட்டு அலற்ச்சிக்கு சிறந்த மருந்து வல்லாரை கீரை ஆகும். கீரைக்காரியிடம் முதலில் சொல்லி வைக்க வேண்டும். ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டால், கண்டிப்பாக இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் இரண்டு வேளை கட புதியதாக செய்து சாப்பிடலாம். இன்று செய்ததை நானை சாப்பிடவே கூடாது. அவ்வளவுதான்.

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: நம்பிக்கையே நல்ல மருந்தாகும்!

ஒரு மருத்துவரை நம்பினால் கடைசிவரை நம்பி மருந்து சாப்பிட வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் வைத்து மருந்து சாப்பிடக்கூடாது. முழுமையாக நம்ப வேண்டும்.

உன்னால் முடியும் தம்பி.... ஒரு கால் பந்து வீரர் உலக சாதனை படைக்க வேண்டும் என்று சாதனை படைத்து சாதிக்க வேண்டும். என்று வைராக்கியம் கொண்டார். இவருடைய துரதிருஷ்டம் மூட்டு வாதம் அலற்ச்சி நோய் ஏற்பட்டுவிட்டது. படுக்கையில் படுத்துவிட்டார். எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. கடுமையான சோதனையில் மாட்டிக் கொண்டார்.

ஒரு மருத்துவதை நியமித்து அவருக்குத் தேவையான பணம் செலவு செய்து என்னை நல்ல மருந்து கொடுத்து குணமாக்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.இது போலவே மருத்துவர் நல்ல மருந்துகள் அளித்தார். ஒரு வருடத்தில் குணமாக்கி விடுவேன் என்று மருத்துவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் கால் பந்து வீரர் விடா முயற்சியும் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தார். தான் இந்த கொடிய நோயிலிருந்து சீக்கிரம் எழுந்து கால் பந்து விளையாடி சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அதே சிந்தனையில் அல்லும் பகலும் சிந்தித்துக்கொண்டு இருந்தார்.

மருத்துவர் ஒரு மடங்கு சொன்னால் இவர் நூறு மடங்கு பத்தியத்துடன் பாதுகாப்புடன் இருந்தார். சொல்லி வைத்தது போல ஆறே மாதத்தில் நோய் குணமாகிவிட்டது மற்றும் ஆறு மாதம் நடந்தும் ஓடியும் பழகி நல்ல சத்துண்ண உணவுகள் சாப்பிட்டு விடாமுயற்சியுடன் மனம் தளராமல் செயல்பட்டார். அவர் சொன்னது போலவே மறுபடியும் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்று மகிழ்ந்தார். எல்லாம் விடாமுயற்சி சாதனை படைக்க வேண்டும் என்ற துடிதடிப்பு, இது போல நீங்களும் சாதனை படைத்து இந்த நோயிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படவேண்டும்.

தாய்மார்கள் உங்கள் மகன் திருமணத்தை பார்க்கவேண்டும். நாம் முன்னின்று நம் வீட்டு திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அதே உற்சாகத்துடன் இருக்க வேண்டும். அதே துடிதுடிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த கொடிய நோயிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும், சாதனை புரிய வேண்டும். ஐயோ, இந்த நோய் என்னை விட்டுப் போகாது, நான் இறந்து விடுவேன் என்று மனதளர்ச்சி கொண்டால் நோய் குணமாகவே ஆகாது.

எதற்காக மன தளர்ச்சி அடைகிறீர்கள்? நோய் குணமாக அது அதன் வழியை மேற்கொள்ளும்போது நீங்கள் ஏன் தளர்ச்சி அடைகின்றீர்கள்? தளர்ச்சிக்கு பதிலாக முயற்சியுடன் இருங்கள். இதுபோலவே ஆண்களுக்கு நோய் உள்ள போது நம் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மருமகள் மாதமாக இருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் குழந்தை பிறக்கப்போகின்றது. நாம் இருந்து குழந்தையை, நம் பேரப்பிள்ளையைப் பார்க்க வேண்டும். நாம் அவனை சிறப்பாக வளர்க்க வேண்டும். நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஆணித்தரமான இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த நோய் குணமடையும்.

ஐயோ என்னால் முடியவில்லை, நான் இறந்துவிடுவேன், எனக்கு செலவு செய்யாதீர்கள் என்று மனத்தளர்ச்சியுடன் நீங்கள் சொன்னால்,இந்த நோய் உங்களை விட்டு போகவே போகாது. இந்த கொடிய பேய் என்ற நோய் உங்களை நன்றாக கட்டி அணைத்துக் கொள்ளும். விடவே விடாது.உங்களை விட்டு போகாது.

நான் இந்த நோயை பேய் என்று சொல்லுகின்றேன். நோய் என்ற பேய் இது பிடித்துக்கொண்டால் போகவே போகாது.இந்த நோயை அசைத்துக்கூட பார்க்க முடியாது. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நோய் சற்று குணம் கிடைத்தால் பரவாயில்லை. எவ்வளவோ பரவாயில்லை. சீக்கிரம் குணமாகிவிடும் என்ற முழு நம்பிக்கையுடன் இருங்கள். முழு முயற்சியுடன் இருங்கள்.

மனதிலே வேதனை சலிப்பு ஏமாற்றம் தோல்வி இருக்கவே கூடாது. இதற்கு பதிலாக முயற்சி சாதனை இருக்கவேண்டும். ஒரு சிறிய நாலுகோல் வண்டியில் உட்கார்ந்து கால் இல்லாதவன் கைகளை கால்களைப் போல அசைத்து வண்டியை ஓடச்செய்து பிச்சை எடுத்து தன் மனைவி மக்களை காப்பாற்றுகின்றான். கால் இல்லாதவர்கள் ஓடி வேலை செய்து தன் வாழ்க்கையை செவ்வனே நடத்துகிறார்கள்.கை விரல்களில் குஷ்டம் ஏற்பட்டும், தான் வாழ்ந்து தன் குழந்தைகளை காப்பாற்றுகின்றான் குஷ்ட வியாதி பிச்சைக்காரன்.

 

சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒன்றும் இல்லாதவன் வாழ்கின்றான். வானமே கூரையாக பூமியை பாயாகக் கொண்டு வாழ்கின்றவன் வாழ்கின்றான். வாழ்கின்றான் என்று சொல்லக் கூடாது. வாழ்வாங்கு வாழ்கின்றான்.

 

இவ்வாறு சொத்துக்களை வைத்துக்கொண்டு இவ்வாறு வசதிகளை வைத்துக்கொண்டு உடலில் எந்த உஷ்ணமும் இல்லாமல் இருக்கிற நீங்கள் ஏன் மனத்தளர்ச்சி கொள்கிறீர்கள்? ஏன் தளரவேண்டும்?எதற்காக மனம் விடுகிறீர்கள்? ஏன் வருத்தப்படுகிறீர்கள்?

நேரம் டைம் இப்போது சரியில்லை. ஜாதகம் பார்த்தாலும் அப்படித்தான் சொல்வார்கள். கிரகக்கோளாறுகள் இப்போது ஜாதகப்படி டைம் சரியில்லை. அடுத்த குரு பெயர்ச்சி வரும்போது இந்த நோய் குணமாகிவிடும் என்று சொல்வார்கள். அதன்படியே குணமாகிவிடும். இருக்கமுடியாது. யாரும் சதா காலம் அழுது கொண்டேயாரும் சிரித்துக்கொண்டே இருக்கமுடியாது. கெட்ட காலம் சில சமயங்களில் வரும் சுக்கிரம் உச்ச கட்டத்தில் வந்துவிட்டால், பணம் செல்வாக்கு உயர்வதுடன் நோய் சொல்லாமல் மறைந்துவிடும். 

இன்று அவன் காட்டில் மழை பெய்கிறது. நாளை நம் காட்டில் மழை பெய்யும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் காட்டிற்கு மழை வராமலா போய்விடும். அவன் காட்டிற்கு மழை பெய்ததுபோல நம் காட்டிற்கும் மழை பெய்யும், நம் காட்டிலும் அடுத்த ஆறாவது மாதம் வெள்ளாமை பயிர் அறுவடை செய்யத்தான் போகிறோம் என்ற முழு நம்பிக்கை நம்முள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் வாழ முடியும். வளரமுடியும்.

கருவரையிலிருந்து கல்லறை வரை கவலைகள் தான் நோயை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் இளமையில் உடலை கட்டுத்திட்டத்துடன், மனக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க ஒவ்வொருவரும் மறந்து விடுகிறோம். இன்றோ அறுசுவை உணவு அளவுக்கு மீறி உண்டு ஏராளமாக செலவு செய்து இன்றைய இன்பத்தை இன்றே அனுபவித்து விடுகின்றோம்.

நாளை நாம் இருப்பது உறுதி இல்லை. இன்றே நாம் அனுபவித்துவிடுகின்றோம் என்று துள்ளித்திரிபவர்கள் உண்டு. சரி

இன்று நாம் வாழ்கின்றோம், நாளை நாம் வாழ்ந்தால் அதற்குரிய பணம் சக்தி இருந்தால்தானே பிழைக்கமுடியும். மனிதன் தான் வாழும் காலத்தில் நாளை ... நாளை என்ற மனநிலை இருந்து கொண்டே இருக்கவேண்டும். நாளை நாம் வாழ்ந்தால் நாலு பணம் நம் கையில் இருக்கவேண்டும்.  நாளை நாம் வாழ்ந்தால், நாம் சேமித்து வைத்த சக்தியைகாப்பாற்றி வைக்க வேண்டும். நாளை நமதே... நாளை என்ற திட்டமிட்டு வாழ்பவனே இந்த வையகத்தில் போற்றப்படுகின்றான். நாளை நமதே என்ற திட்டமிட்டு வாழாதவனை இந்த வையகம் தூற்றப்படுகிறது, காரி துப்புகிறது.வாழும் காலத்தில் நாலு பணம்சேர்த்து வைக்காது வாழ்ந்த இவன் ஒரு மனிதனா? என்று தூற்றுகிறது.

 கருவரையிலிருந்து கல்லரை வரை மனிதனுக்கு கஷ்டம், கஷ்டம், தீராத கஷ்டம், நஷ்டம், ஏமாற்றம் கவலை இதுதான் அவன் ஒவ்வொரு கால கட்டத்திலும் நேரடியாக சந்திக்கின்றான். நிறைய சொத்து இருந்தும், ஏமாற்றி சொத்தை ஒரு ரவுடி அபகரித்துக்கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் எத்தனை ஆயிரம் குடும்பங்கள்?

தொழிலில் கடன் வாங்கி நஷ்டம் அடைந்து வாங்கிய திருப்பிக் கொடுக்கமுடியாமல் வாழ்கிறவர்கள் பணம் பலர்.திருமணத்திற்கு வாலிப பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு திருமணம் ஆகாமல் கஷ்டப்படுகின்ற குடும்பங்கள் ஆயிரம்.

இதுபோல எத்தனையோ கஷ்டங்கள் வெளியே சொல்லமுடியாத ஆயிரம், ஆயிரம். கஷ்டங்கள், கவலைகள் இல்லாத குடும்பமே இல்லை. இத்தனை சிறிய தலையை வைத்து உலக அளவு கவலையை இறைவன் வைத்துவிட்டான். கை அளவு இதயத்தை வைத்துவிட்டு, கடல் அருவி போல கஷ்டங்களை வைத்துவிட்டான்.

நம் கோயிலில் 1001 ஆயிரத்து ஒன்று சிவலிங்கத்தை வணங்குகின்றோம்.ஒரே கல்லில் 1001 சிவலிங்கத்தை உருவாக்கிய அந்த கல் எத்தனை லட்சம் முறை அடி வாங்கி இருக்கும்.அந்த கல் பல லட்சம் அடி வாங்கி உருவம் அமைத்து பின் அந்த கல் தெய்வீக கல்லாக மாறி நாம் இறைவணக்கத்திற்குரிய தெய்வீக புனிதத் தன்மையைப் பெறுகிறது.

இதைத்தான் இந்து அல்லாத பிற மதத்தினர் நம்மை கேவலப்படுத்துவார்கள். கல் கடவுளை  வைத்து வணங்குகின்றார்கள் என்று கேலி பேசுவார்கள்.இந்த தெய்வீகக்கலை. நோக்கத்துடன் தத்துவ ரகசியத்தை அறிந்துகொள்ளவேண்டும்.

பிற மதங்களை கேலி செய்யாதே என்று அருள்மிகு இயேசு கிறிஸ்து கூறி இருக்கிறார்.பிற மதங்களை கேவலமாக பேசாதே என்று அண்ணல் நபி ஸல் கூறி இருக்கின்றார்.

அந்த புனித கல் தெய்ளீகமாகிறது. மனிதனும் தெய்வமாகலாம். புத்தர் தெய்வமாகவில்லையா? ஏயேசு தெய்வமாகவில்லையா? வள்ளலார் தெய்வமாகவில்லையா? அருணகிரிநாதர் தெய்வீக நிலை அடையவில்லையா? நக்கீரர் தெய்வ அம்சத்தைப் பெற்றார். இவர்களுக்கும் கவலை இருந்தது. அந்த கவலை எல்லாம் அன்று அன்று நாம் வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை வெளியேற்றி வைப்பது போல அன்று அன்று தோன்றுகின்ற குப்பையை நாம் நம் மனதிலிருந்து கவலை என்ற குப்பையை வெளியேற்ற வேண்டும்.

கவலைதான் நோய்க்கு மூல காரணம். யார் ஒருவன் இல்லாமல் இருக்கின்றானோ அவன் வாழ்வாங்கு கவலை வாழ்வான்.கவலை இல்லாத மனிதன் கல் போன்று மனஉறுதியுடன் இருப்பான்.

கவலை இல்லாத மனிதன் கஷ்டங்களை வென்று காலங்களை வென்று வாழ்வான்.கஷ்டம், கவலை யாருக்குத்தான் இல்லை. ஒரு அரசை ஆளும் மகாராஜாவுக்குக் கூட கவலை, தீராத கவலை இருக்கின்றது.

அயல்நாட்டுக்காரன் படை எடுத்து நம்மை அடிமை ஆக்கிவிடுவானே என்று தீவிரமாக கவலை உண்டு. அயல்நாட்டுக்காரன் அடைபவர்களும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பாதுகாப்புடன் மன வலிமையுடன் இருப்பான். நாம்

கவலையை நீங்கள் உங்கள் சக்தி கொண்டு ஓட்டி விரட்ட வேண்டும். அந்த பேய் உங்களை அமுக்கி உங்களை வீழ்த்திவிடும். அந்த கவலை உங்களைக் கண்டு பயப்பட்டு ஓட வேண்டும். கவலை, கவலை, அதைக்கண்டு நீங்கள் பயந்து ஓடக்கூடாது.

இந்த கொடிய கவலைக்கும் இந்த நோய்க்கும் என்ன சம்பந்தம் இருந்தது என்றால்....நிறைய சம்பந்தம் இருக்கிறது. முதலில் கவலை ஆரம்பிக்கிறது. உடல் இயங்குவதற்கு உஷ்ணம் தேவை. ஆக்கப்பணிகளுக்கு உஷ்ணம் மிக மிக தேவை. கவலை சதா காலம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது கவலையினால் உடலில் உஷ்ணநிலை பாதிக்கப்பட்டு சீதளம் ஏற்படுகிறது. இருக்க வேண்டிய அளவான உஷ்ணநிலை குறைகிறது.

கவலையின் போது நாம் பலமாக அழாவிட்டாலும் மனதார மனம் விட்டு துயரப்படும்போது இருக்கவேண்டிய உஷ்ணம் தானாகவே குறைகிறது. சீதளம் ஏற்படுகிறது. உஷ்ணம் குறைந்து உடல் ஜில் என்று ஆகிவிடுகின்றது. இந்த ஜில் நாளடைவில் அதிகரிக்கின்ற போது இரத்த ஓட்டம் சீராக ஓடுவதற்குரிய வழிமுறைகள் சீராக அமைவதில்லை.

இந்தக் காலங்களில் மூட்டுக்காலில் வலி சாதாரணமாகத் தான் ஆரம்பிக்கின்றது. பின் இந்த மூட்டுவலி சிறுக சிறுக தோன்றி நாளடைவில் நிரந்திரமான மூட்டு வலியாக அமைந்துவிடுகிறது.

இன்று வியாபாரத்தில் நஷ்டம். விடாமுயற்சியுடன் மறுபடியும் வியாபாரம் செய்தால் இழந்த நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம். விடாமுயற்சியில் மறுபடியும் கொள்ளை லாபம் சம்பாதித்து வாழ்ந்து காட்டிவிடலாம்.

ஒருமுறை தோன்றிய கடுமையான திட்டுவாத தோய் முற்றிவிட்டால் மறுபடியும் குறையுமா?உங்கள் மகள் திருமனம் இன்று நடைபெறவில்லை. நாளை சிறந்த இடத்தில் நடைபெற்று விடுகிறது.

நேற்றைய மூட்டுவலி இன்று பயங்கரமாக வளர்ந்து முதிர்ந்து விடுகிறது. அத்த பயங்கர வலி உடனே போய்விடு, போய்விடு என்றால் போய்விடுமா?அது அது எப்போது என்ன என்ன நடக்குமோ, அதுதான் நடக்கும். நம் கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் இறைவன் செயல்.

ஆனால் நாம் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் வருமுன் காப்போம் என்ற நிலையில் இருக்கவேண்டும்.அப்போதுதான் நோம் நம்மைக் கண்டு நம்மைப் பிடிக்க பயப்படும்.

நாம் பயந்த சோம்பேறி கோழையாக இருந்தால், இவல் ஏமாளி என்று நோய் நம்மை ஸ்ட்ராங்காக பிடித்துக்கொண்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிடும்.கவலையினால் நீங்கள் ஏதாவது வெற்றி கண்டு இருக்கிறீர்களா?

உங்கள் மகள் திருமணத்தை நான் முன்னின்று நடத்துவேன்' என்ற வைராக்கியத்துடன் ஜாதி ஜனங்களுக்கு முன்பு, நம் விரோதிகளுக்கு முன்பு நின்று நடத்திக் காட்ட வேண்டும். அந்த வைராக்கியம் வேண்டும்.

பயந்து பயந்து கவலை அதிகரித்து, நீங்கள் வாழ்ந்தால், கவலையே உங்களை கொன்றுவிடும். பின் உங்கள் மக்கள் அனாதைகளாகிவிடுகிறார்கள்.நீங்கள் இருந்து செய்யவேண்டிய நல்ல காரியத்திற்கு பதிலாக வேறு யார் இருந்தாலும், நீங்கள் இருப்பதுபோல இருக்குமா?

கணவனை இழந்த பெண்களுக்கு இந்த நோய் அதிகமாகிறது. காரணம் கணவனை நினைத்து நினைத்து சதா காலம் கவலை கவலை கவலை, இந்த கவலைதான் நோயை நாளுக்கு நாள் சிறுக சிறுக அதிகரிக்கின்றது. கவலை அதிகரிக்க அதிகரிக்க நோய் அதிகரிக்கும், கவலையினால்தான் நோய் தீவிரம் அடைகின்றது. கவலை சீதளத்தை உஷ்ணத்தை குறைக்கிறது. இதனால் இந்த நோய் நிரந்தரமாக குடி கொண்டு மூட்டு அலற்ச்சி வாத நோயை உருவாக்கிவிடுகிறது. எச்சரிக்கின்றேன், எங்களுக்கு வருகிற பெருவாரியான நோய்கள் கவலை மிகுதியினால் முற்றிய பின்புதான் என்னிடம் வருகிறார்கள். நோய் உடனே குணமாக்க நாங்களும் உங்களுடன் சேர்ந்து பெரும் சிரமத்தை மேற்கொண்டு பல மாதங்கள் கழித்து நோயை குணமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

குடும்பத்தின் ஆண் துயண இல்லையென்றால், குடும்பம் நடக்கவில்லையா....பெண்கள் கணவனை சதா காலம் நினைத்து நினைத்து அதே கவலையில் கண்ணீருடன் இருப்பதினால் இந்த நோய் முற்றிவிடுகிறது. உட்கார்ந்தால், எழுந்திருக்க முடியவில்லை மயக்கம் தள்ளுகிறது  சரியாக உணவு சாப்பிடுவதில்லை. இரவில் கவலையினால் தூக்கம் சரியாக வருவதில்லை. நோய் சிறுக சிறுக ஆரம்பித்து முற்றிவிடுகிறது.

கோபுரத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போது பெரிய வானளாவிய பெரிய கோபுரம் நம் கண்ணுக்கு தெரிகிறது. அதே சமயம் கஷ்டப்பட்டு அந்த கோபுரத்திற்குள் சிறுக சிறுக நடந்து மேலே செல்லும்போது கோபுரத்தின் மேல் இருந்து கீழே பார்க்கும்போது சாதாரணமாக தெரிவதுபோல

சாதாரண கவலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சாதாரண கவலையை மிகப் பெரிய கவலையாக எடுத்துக் கொள்ளலாம். சாதாரண கவலையை குப்பையை கூட்டி வெளியே எடுத்து வீசுவதுபோல வீசி எரியவும் செய்யலாம். எல்லாம் நம் கையில்தான் உள்ளது. மனதை அடக்க வேண்டும். கவலையினால்தான் இந்த நோய் அதிகரிக்கின்றது.

ஒரு குடும்பத்தில் வீட்டின் தலைவனுக்கு வாத நோய் வந்து கை கால் வணங்காமல் பாரிச வாதம் ஏற்பட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த குடும்பத்தின் தலைவி இதைப் பார்த்து பார்த்து தன் கணவனுக்கு சேவை செய்து அதே கவலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தால், எங்கள் மருத்துவமனைக்கு வந்த அந்த குடும்பத் தலைவியை நாங்கள் பரிசோதனை மேற்கொள்ளும்போது அந்த அம்மாவுக்கும் ஒரு சில நாட்களில் பாரிச வாதம் ஏற்படும் நிலையை நாங்கள் தீவிர பரிசோதனையில் கண்டறிந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து தீவிர சிகிச்சையை மேற்கொண்டு, அந்த தாயை காப்பாற்றினோம். நான் பட்ட கஷ்டம் ஏனக்குத்தான் தெரியும். இரத்தக் கொதிப்பு அதிகமாகி, கைகால் விரல்களில் உணர்வே இல்லை. கவலையினால் ஹிஸ்டிரியா போல அந்த அம்மா இருந்தால். அந்த மன நிலையை சமப்படுத்தி, ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் அவ்வளவு கஷ்டப்பட்டேன். கவலையிலேயே இருப்பதனால் நேர நேரம் உண்பதில்லை. உறங்குவதில்லை. சதா அதே எண்ணம், கவலை, ஏமாற்றம், துரதிருஷ்டத்தை நினைத்து நினைத்து சாப்பிடாமல் இரத்தக்குறைவு உண்டாகிவிடுகிறது.

மனம் தைரியமாக நேர நேரம் வீட்டில் செய்து வைத்ததை சாப்பிடவேண்டும். இதற்காக ஸ்பெஷல் மீல்ஸ் தேவை இல்லை. ராகி கூல் ஒன்று போதுமே. ராகி கூல் இதற்கு நோயை குணமாக்கும் சக்தி இயற்கையாகவே இருக்கிறது.

றராகியை லேசாக தண்ணீர் ஊற்றி ஒரு வெள்ளைத்துணியில் மூட்டை கட்டி நிழலில் வைத்தால் முளை கட்டிவிடும்., இதை நிழலில் உலர்த்தி புடைத்தால், வெள்ளை முளை தனியாக வந்துவிடும். கருப்பு தோல் வெளியேறிவிடும். இதை அரைத்து பத்திரப்படுத்திக் கொண்டு கஞ்சி வைத்து சாப்பிட்டால் மூட்டு வாத ரோகம் ஏற்படாது. மூட்டு அழற்ச்சி நோய் உள்ளபோதும் இதை செய்து குறைக்கலாம். 

இதே முறையில் சத்து மாவு செய்யும் முறையில் கூட நீங்கள் செய்து சாப்பிடலாம்.ராகி, கோதுமை, கம்பு, பொட்டுக்கடலை, நிலக்கடலை, சோளம், (பார்லி மிக குறைவு). பணம் இருந்தால், பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, பிஸ்தா முதலியவைகள் கூட சேர்க்கலாம்.

இவைகளை சம எடை எடுத்து அரைத்து சூடான பாலில் கலந்து சக்கரை நெய் கலந்து சாப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை இந்த சத்து மாவை அதிகரிக்கும். அதே போல நோய் உள்ளபோது அவசியம் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய் வெகு சீக்கிரம் குணமடைந்துவிடும்.

இந்த முறையை நாம் ஏழைகளுக்குச் சொல்லி ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றி இருக்கிறேன். சத்துமாவு+பால்+சக்கரை+ஒரு டீஸ்பூன் நெய் இவைகளை ஒன்று கலந்து மாலட்டு முறையில் சாப்பிட்டு வரவும். இதற்கு எந்த பத்தியமும் இல்லை. வளரும் குழந்தைகளுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தாராளமாக சாப்பிட்டு வந்தால், ஊட்டசத்துடன் வளர்வார்கள். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பிறக்கிறது.

சத்துமாவு தயாரிக்கும் முறை அதிக செலவு இல்லாத முறை ஆகும். 'வைத்தியனுக்கு கொடுப்பதைக் காட்டிலும் சத்து மாவுக்குக் கொடு' என்ற புதிய பொன்மொழிக்கு இலக்கணம் வகுக்கலாம். சத்து மாவு உண்பதினால் இந்த மாதிரியான நோய்கள் வராமல் தடுப்பு அணை போட்டு இந்த கொடியநோயிலிருந்து நீங்கள் தப்பித்து வாழலாம். சாதாரண ராகிக்கு ஒரு மடங்கு பவர் என்றால் முளை கட்டிய ராகிக்கு பத்து மடங்கு சத்து அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாவை சாப்பிட்டால், வேறு எந்த நோயினாலும் பாதிக்காமல் சக்தியுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

 

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: ஓய்வு தேவை

எங்கள் மருத்துவமனைக்கு இதுபோல் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். அனைவருக்கும் உயர்வான மருந்து கொடுத்து இறை சக்தியினால் குணமாக்கிவிடுகிறேன். நான் பெண்களையும், ஆண்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் ஓய்வு இல்லாமல் மேலும் மேலும் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

எப்போதும் பகலில் எவ்வளவு கடுமையான வேலைகளையும் நாம் செய்யலாம். இரவில் நன்கு தூங்க வேண்டும். பகலில் சூரியனின் துணை கொண்டு ஆக்கப்பணிகள் அனைத்தும் அயராது செய்யலாம். பகலில் சூரியனுடன் போராடி, வேலைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டு உஷ்ணம் அடைந்த நிலையில் இரவில் சந்திரனின் குளிர்ந்த கதிர் இயக்கத்தின் சிறப்பால் உஷ்ணம் தளர்ந்த சோர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குளிர்ச்சித் தன்மையை அளித்து நரம்புகளுக்கு சக்தி அளித்து

மறுநாள் புதுத்தெம்புடன் சந்திரன் நமக்கு ஒரு மருத்துவரைப்போல தணை செய்து ஆக்கப் பணிகளுக்கு புது தெம்பு அளிக்கிறார். இதே நிலையில் இரவில் தூங்குவதற்கு பதிலாக மறுபடியும் கண் விழித்து வேலை தொடர்ந்து செய்வதினால் சக்தி குறைந்து தளர்ச்சி ஏற்படுகிறது. தளர்ச்சி ஏற்படுமாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நிலையில் மூட்டுவலி லேசாக ஆரம்பித்து சிறுக சிறுக இந்த நோய் தீவிரம் அடைந்து மூட்டு அழற்சி நோய் ஏற்பட்டு விடுகிறது.

இதனால் பகலில் வேலை செய்யுங்கள். இரவில் மூட்டுவலி இருப்பவர்கள் கண் விழித்து இரவில் வேலை செய்யாதீர்கள். அப்படி செய்தால் கண்டிப்பாக மறுபடியும் நோய் சீக்கிரம் குணம் அடையாது. மேலும் மேலும் வலியினால் வேதனை அதிகரிக்குமே தவிர குறையாது.

நீங்கள் வேலைக்குப் போகாமல் நல்ல ஓய்வுடன் இருங்கள் நான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் என்று சொல்லும்போது வயிறு இருக்கின்றதே பிழைப்பு நடத்த பணம் இல்லையே என்று சொல்லுவார்கள்.

வேலைக்கு போகவில்லை என்றால் எப்படி பிழைப்பது என்று கேட்பவர்கள் தான் அதிகம். சில நாட்கள் ஓய்வு இருந்து குணமாக்கிக் கொண்டு அதன் பின்பு வேலைக்கச் செல்லலாம், அதை விட்டு வேலை வேலை என்று ஓய்வு இல்லாமல் வேலை செய்யும் போது திடீர் என்று மயக்கம் வந்து விழுந்துவிட்டால் ஒரேயடியாக படுத்த படுக்கை ஆகி விடுமே. என்று சற்று நினைத்துப் பாருங்கள். விட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு டாங்கன வண்டி போல சிறுக சிறுக வாழ்க்கை வண்டியை மெதுவாக ஓட்டலாம். ஓய்வு இல்லாமல் வேலை செய்யும்போது சாதாரண நோய் ஆபரேசனில் போய் முடிந்துவிட்டால் எங்கும் சம்பாதிக்க வெளியே போகமுடியாதே. ஒரேயடியாக படுக்கையில் படுத்து ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமே.

இதை நோயாளிகள் அவசியம் சற்று சிந்திக்கவேண்டும். கடுமையான நோய் ஆஸ்பத்திரியில் படுக்கையில் ஒரு வாரம் படுத்து இருந்து ஓய்வு கொடுத்தால், அந்த நோய் ஒரே வாரத்தில் குணமடைந்து நோயாளி தன் வீட்டை நோக்கி ஓடுகின்றான் எப்படி எனில் ஓய்வுதான் காரணம். வருடக்கணக்கில் உழைக்கின்ற இந்த உடலுக்கு எப்போதும் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நோய் சீக்கிரம் குணமாகும்.

உடல் உழைப்பு ஒரு வகை உழைப்பாகும். மூளைக்கு கொடுப்பது, அதுவும் ஒரு வகை உழைப்பே வேலை ஆகும்.உதாரணத்திற்கு ஒரு சாதுவான வீட்டு பெண் மிக அமைகியாக ஒழுக்கத்துடன் வாழ்கின்றாள். இவளால் அந்த தெருவில் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. ஒரு நாள் எதிர் வீட்டு ரவுடி அந்த தாயைப் பார்த்து கூட்டம் கூட்டி கண்டபடி திட்டிவிடுகின்றான். இதைக் கேட்ட தாய் அவள் மனம் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அந்த ரவுடியைத்தான் மனதிற்குள் திட்டிக்கொண்டே இருக்கிறாள்.

ஒரு நாளைக்கு மூளை நரம்புகள் நூறுமுறை செயல்படுவதற்கு பதிலாக 1000 முறை அதி தீவிரமாக செயல்படுகிறது. இதனால் உடல் முழுவதும் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது. சக்தி குறையும்போது நோய் உள்ளே புகுந்து கொள்கிறது. சிறுக சிறுக இந்த நோய் ஆரம்பித்து பின் கடுமையான நோயாக மாறி பெரும் அவதியை உண்டாக்கி விடுகிறது. முதலில் நோய் இப்படித்தான் ஆரம்பித்து முற்றுகிறது.

அந்த ரவுடி திட்டினால் திட்டட்டும். கடவுள் இருக்கிறார், யார் நல்லவர், யார் கெட்டவர் என்று இறைவனுக்குத் தெரியும். அவரே பார்த்துக்கொள்ளட்டும் என்று இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் தைரியத்துடன் நம்முடைய முன்னேற்றப் பாதையை கவனிக்க வேண்டும்.

இதுபோலத்தான் சொந்தத்தில் நாம் எதார்த்தமாக கபடு சூது இல்லாமல் வெள்ளை மனதுடன் பேசுவோம். அதை சிலர் கண் மூக்கு வாய் வைத்து பெரிய பிரச்சனைக்கு நம் குற்றவாளியாக மாற்றிவிடுவார்கள். ஆகட்டுமே, பரவாயில்லை.அவர்களுடைய குணத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்படுகின்றது. அதைப்பற்றி சந்தோஷப்படுங்கள். ஒரு நல்ல வாய்ப்பு

நடப்பதெல்லாம் நல்லதற்குத்தான் என்ற மன பக்குவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.ஏதோ எதையோ உங்களைப் பற்றி சொல்லிவிட்டார்கள் என்பதற்காக மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள். இதனால் நாம்பு தளர்ச்சி அடைவதுடன், மூளைக்கு அதிக உஷ்ணம் ஏற்பட்டு, மூளை அதன் சிறப்பு திறமையான வேலைபாடுகளை அதன் சக்தியை இழந்துவருவதினால், இது போன்ற நோய் ஆரம்பித்ததில் லேசாக ஆரம்பித்து போக போக அது முற்றி பெரிய நோயாக மாற்றி அமைத்துக் கொள்கிறது.

மன் தளர்ச்சி ஆகாது. மணமது செம்மையானால் மார்க்கம் உண்டு. மன தளர்ச்சி ஏற்பட்டால் மரணம்தான் சம்பவிக்கும். மூட்டு சுழற்சி நோய் தீவிரம் அடையும்போது மரணம் ஹார்ட்டு அட்டேக் சிலருக்கு சம்பவிக்க வாய்ப்பு ஏற்படுவது இயல்பு.

ஆறிலும் சாவு. அறுபதிலும் சாவு என்ற நினைவில் துணிந்து செயல்பட்டால் மரணம் உங்கள் பக்கம் வரவே வராது. உங்களுடைய மன உறுதியான திறமை, தைரியம் வாய்ந்த உங்களைக் கண்டு பயந்து இந்த நோய் ஓடி மறையும்.

இந்த நோயைப் பொருத்தவரை மரணம் என்பது உடனே ஆக்கக்கூடிய வியாதி அல்ல.மரணம் திடீர் என்று ஏற்படாது. அதற்கு பதிலாக நோய் தீவிரம் அடைந்து படுக்கையுடன் படுக்க வைத்துவிடும். சிறுக சிறுக வாதனை செய்து மூட்டுக்களில் வலி வீக்கம் கொடுத்து பயங்கர வேதனையைக் கொடுக்கும். காலை முதல் இரவு வரை எப்படியோ வேலைகளை செய்து சுதாரிக்கலாம்.

இரவில் படுத்து, காலையில் எழுந்திருக்கும்போதுதான் பயங்கர கஷ்டம் ஏற்படும். தூக்கம் தூங்கியபின்பு உடனே சாதாரணமாக எழுந்திருக்கவே முடியாது.

கை கால்கள் உடனே வேலை செய்து வணங்காது. கஷ்டப்பட்டு செயல்படுத்த வேண்டும். நீங்கள் காலை எழுந்தவுடன் கை கால்களை சுடுநீர் விட்டுத்தான் கை கால்களை சுத்தப்படுத்த வேண்டுமே தவிர குளிர்ந்த நீரினும் சுத்தப்படுத்தக் கூடாது. அதற்கு பின்பு கூட சாதாரண நீர் ஊற்றலாம். ஆனால் காலையில் எழுந்த நிலையில் சுடுநீர் தான் பயன்படுத்த வேண்டும்.

குளிர் காலங்களில் தேங்காய் எண்ணை கெட்டியாவது போல குளிர் காலங்களில் இந்த நோய், இந்த நோயை உருவாக்கும் சர்வாங்க வாத நீர் கெட்டித்தன்மை அடையும் வாய்ப்பு ஏற்படும்போது இந்த வியாதி குளிர்காலங்களில் கடுமையான வலியுடன் இருக்கும். வெயில் காலங்களில் தேங்காய் எண்ணை தண்ணீர் போல இருப்பதுபோல் இரத்த ஓட்டம் சீராக ஓடுவதுடன் கெட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படாத வகையில் வெய்யில் காலங்களில் இந்த நோய் தீவிரம் அடையாது, அதிக உபத்திரவம் அளிக்காது, குளிர் காலங்களில் தான் இந்த நோய் அதிக உபத்திரவம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: முயற்சியே நோயை விரட்டும்!

ஒரு நோய் குணமடைய டாக்டருடைய ஒத்துழைப்பு மட்டும் போதாது, ஒரு நோய் குணமடைய நோயாளியின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் தேவை ஆகும். மருத்துவர் விலை உயர்ந்த தங்க பஸ்பம் கொடுத்து நோயை குணமாக்கி விடலாம் என்று திட்டம் தீட்டினாலும் நோயாளியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் தங்க பஸ்பம் வேலை செய்யாது.

தங்க பஸ்பத்துடன் நோயாளியின் ஒத்துழைப்பு விடாமுயற்சி இவைகள் இருந்தால் கண்டிப்பாக நோய் ஓடிவிடும்.ஒத்துழைப்பு இல்லாத சோம்பேறியுடன் நோய் தொடர்ந்து குடிகொண்டு இருக்கும்.

ஒத்துழைப்பு அளித்து நோய் முழுமையாக குணமாக வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உள்ள சுறுசுறுப்பாக உற்சாகம் உள்ளவனிடம் நோய் இவனுடைய விடா முயற்சியைக் கண்டு ஓடிவிடும்.

மருத்துவர் ஒரு மடங்கு பத்தியம் சொன்னால் இவர்கள் பத்து மடங்கு விடாமுயற்சியுடன் பத்தியத்துடன் இருந்து நோயை குணமாக்கிக் கொள்வார்கள். இறக்கும் நிலையில் கூட ஒரு நோயாளி தன் உயிர் பிழைத்துக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் விடா முயற்சி உற்சாகத்துடன் இருந்தால்,

பிரியக்கூடிய உயிர் கூட பிரியாமல் தங்கி இருக்கும். முயற்சி முயற்சி விடா முயற்சி. இவைகள் வெற்றி படிகள் ஆகும்.

தங்க பஸ்பத்தை பெற்றுக்கொண்ட நோயாளி மருந்து

சாப்பிட சோம்பேறித்தனப்படுவதுடன், எனக்கு எங்கே நல்லா ஆகப்போகின்றது. இனி நான் பிழைக்கவே மாட்டேன், எனக்கு வைத்தியம் செய்வதிலே பலன் பயன் இல்லை நான் பிழைக்க மாட்டேன் என்று சதா காலம் புலம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு நம்பிக்கை இல்லாத சோம்பேறித்தனம், விடாமுயற்சி இன்மை இவைகளினால் நோய் குணமடையாது எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு நோய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மன நோய் என்று நாம் அதை குறிப்பிடுவது உண்டு. முயற்சி உடையவனுக்கு விடா முயற்சி வைராக்கியம் உள்ளவர்களுக்கு மூட்டுநோய் தோன்றிய ஒரு சில மாதங்களில் குணமாக்கிக் கொள்கிறார்கள்.

விடா முயற்சி இல்லாத சோமிபேறிகளுக்கும், அசால்டாக உள்ளவர்களுக்கு மூட்டுவலி நோய் சிறுக சிறுக ஆரம்பித்து நாளடைவில் தீவிரம் அடைந்து பெரும் கஷ்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள். சுமார் 50 ரூபாயில் செலவில் முடியும் நோய் செலவை, இதுபோல கவனக் குறைவாய் இருப்பவர்கள் முற்றிய நிலையில் 5000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாக்கிக் கொள்கிறார்கள். குண்டுசியில் போக வேண்டிய நோயை கோடாளி கொண்டு வெட்டி எடுக்கும் கடுமையான கஷ்டமான நிலையை உருவாக்கிக் கொண்டு தத்தளிக்கிறார்கள்.

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: சோம்பேறிகள்

வெயில் காலங்களில் வெள்ளை பூசணிக்காயின் சாறு குடிக்க வேண்டும். கோவை பழம் சாப்பிடவேண்டும்.கோவை தண்டு கசாயம் வைத்து குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத் குடிக்கலாம்.

பார்லி அரிசி கஞ்சி" தினம் 2,3 வேளை குடிக்கலாம். கொழுப்பு வகையான உணவுகள் சாப்பிடாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.தேனும் + எலுமிச்சம் பழ சாறு கலந்து தினம் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

உடற்பயிற்சியை விடாமல் செய்து பழகுங்கள். நல்ல வேர்வை அதிகம் வெளியேறும்படியாக வேலை செய்யுங்கள். மூத்திரம், மலம், சிறப்புற வெளியேறும்படி அதற்குரிய உடற்பயிற்சிமேற்கொள்ளுங்கள். ஆசனப்பயிற்சிகளை செய்து பழகுங்கள்.

இதுபோல நீங்கள் செய்து வரும்போது உடல் குண்டாக இருக்கலாம். உங்களுக்கு மூட்டுவாத நோய் தாக்காமல் பாதுகாப்புடன் வாழலாம். அளவுடன் சாப்பிடவேண்டும். சுகமாக இரவு பகல் அதிகம் தூங்கக்கூடாது.

சிலருக்கு உணவு

கூட அவ்வளவு சிறப்பாக

உண்ணமாட்டார்கள். நேரா நேரம் சாப்பிடுவது, நன்றாக சுகமாகத் தூங்குவது,எந்த உழைப்பும் பொறுப்பும் இல்லாமலேயே பொழுதை போக்குவது அவருடைய பழக்கவழக்கமாகும்.

சிலர் உண்டு உறங்குவதினால், எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரித்தனமாக உண்டு உறங்கி வாழ்வதினால் நோய் ஏறிவிடும். உணவு அதற்குரிய உழைப்பு இது தான் இலக்கணம் ஆகும். செய்த உடம்பு சேவேரும் செய்யாத உடம்பு நோய்யேரும் என்பது தான் பொன்மொழி ஆகும்.

சோம்பேறிகளின் வாழ்க்கை நிலை ஒரு

வாழ்வா... உழைப்பே உயர்வு தரும். உழைப்பே ஒரு மனிதனுக்கு புருஷ லக்ஷ்ணம் ஆகும்.
உழைப்பில்லாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்கள் எப்போது பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டே எதையாவது சாப்பிட்டுக் கொண்டு சிறிய யானையைப் போல பெருத்த உடல், பெரிய பானைப் போல வயிறுடன் காட்சி அளிப்பார்கள். இவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். இது ஒன்றே குறிக்கோள் ஆகும். எதைப்பற்றியும் சிந்திக்கமாட்டார்கள். பணம் பணம் பணத்தை வைத்து இரவு பகல் காத்துக் கொண்டு பணத்தை வைத்துக்கொண்டே பணம் சம்பாதிக்கும் வட்டி கடை குண்டு ஆசாமிகளுக்கு மூட்டுவாதம் நோய் ஏற்படுகிறது. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. எழுந்தால் உட்கார முடியவில்லை. மூட்டுக்களில் நீர் கட்டு. தினம் தினம் மசாஜ் செய்துகொண்டே

இருப்பார்கள். நோய் இவர்களை விட்டு போகாது. கடைசி வரை நோய் இவர்களை விட்டு விலகாமல் அப்படியே இருந்து கொண்டுதான் இருக்கும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் இந்த நோய் இவர்களை விட்டு, போகாது. முழங்கால் ஒவ்வொன்றும் தூண் போல இருக்கும். இவர்களுடைய நோயை குணமாக்கவே முடியாது. நோயை குணமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியே இருக்காது.

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: எச்சரிக்கையுடன் இருங்கள்

சில ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வீட்டினுள் படுக்க மாட்டார்கள். வீட்டின் வாசலில் தான் காற்றோட்டத்திற்காக படுப்பார்கள். வெயில் காலங்களில் வாசலில் திறந்த வெளியில் படுத்துக் கொள்வார்கள். வீட்டினுள் காற்றோட்டம் இல்லாமல் புளுக்கம் இதனால் குளிர்காலங்களில் கூட வீட்டின் முன்வாசலில் படுத்துக்கொள்வதை இவர்கள் தங்கள் பழக்கமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

இளமை சக்தி இருக்கும்வரை எந்த நோயும் உங்களை தாக்காது. சக்தி குறையும்போது இதுபோல வெளியே படுத்து தூங்குபவர்களுக்கு மூட்டுவலி நோய் ஏற்படுகிறது. வெயிலில் இது பாதிப்பு அடைவதில்லை. குளிர்காலங்களில் இந்த நோய் குளிர்ச்சி குளிர்ச்சி அதி தீவிரமான குளிர்ச்சியினால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து குளிர்ச்சித் தன்மையினால் இரத்த ஓட்டம் சீரான தன்மையிலிருந்து மதுவாக அதனால் நரம்பு தளர்ச்ச ஏற்பட்டு, இதன் மிகுதியினால் எக்குவா என்று சொல்லும் பாடி வாதம் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.

எந்த சூழ்நிலையிலும் யாரும் எப்போதும் வெட்ட வெளியில் ! மொட்டை மாடியில் படுக்கக்கூடாது. தெரியாமல் படுத்து இருந்தால் இனி பதக்காதீர்கள். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இரவு நேரம் வாய் மறந்து தூங்குமாறு ஆகாயத்தில் சில சமயங்களில் காமா ரேஸ், எக்ஸ்ரே ரேஸ், வைலட் ரேஸ், போன்ற கதிர் இயக்கங்களில் அது வெட்ட வெளியில் அடர்ந்த அடர்த்தியின் பயங்கர தீவிரமான சக்தியுடன் புறப்படும் நிலையில் வெட்ட வெளியில் படுத்து தூங்குபவர்களை எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்களை இது தன் இச்சைக்குட்பட்டு தாக்கி சென்றுவிடும்.

காலையில் எழுந்து பார்த்தால், கைவராது. கால்வராது, முகம் இழந்து கிடக்கும், இந்த நிலையில் தான் பல நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். எப்படி இந்த நோய் ஏற்பட்டது? என்று நாம் கேட்கும்போது அவர்கள் இந்த கதையைச் சொல்லுகிறார்கள். வாத நோயும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோலவே மூட்டு வாத நோய் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு நேரிடலாம், எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் எந்த தோயும் வராது. பாதுகாப்புடன் வாழலாம்.
சிலர் எப்போது பார்த்தாலும் எதையாவது தின்று கொண்டே இருப்பார்கள். பசுமாடு அசைவு போடுவது போல அசைவு போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஓய்வு இல்லாமல் எதாவது நொறுக்குதீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதுபோல உள்ளவர்கள் நாளுக்கு நாள் உடல் எடை கூடிக் கொண்டே போய்விடும். உடல் குண்டாக காட்சி அளிப்பார்கள். உடல் பெருத்து இருக்கும். ஊழைச்சதை அதிகரிப்பதினால் குண்டாக காட்சி அளிப்பார்கள். உடல் எடையை தூக்கிக் கொண்டு அவர்களால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மற்றவர்களைப் போல உட்கார முடியவில்லை. மற்றவர்களைப் போல உடனே எழுந்திருக்கவும் முடியாமல் அவதிப்படுகிறார்கள் இது எதனால் என்றால்...?

ஊழைச் சதையினால் இவர்களுக்கு சர்வ சதாரணமாக முழங்கை, முழங்கால், மூட்டுவலி ஏற்படுகிறது. இதுபோல உள்ளவர்கள் கொழுப்பு உணவை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மாமிச உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். உப்பு குறைவாக இருக்க வேண்டும்.

தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சர்வ 5 சாதாரணமாக நடக்க வேண்டும். உடலில் உள்ள ஊழைச்சதை குறைய பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.நம்மால் உடலை குறைக்க முடியும் என்ற வைராக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: ஒரு தாய் சொல்கிறார்கள்

நல்ல இளமையும் கட்டும் உள்ள சக்தி உள்ள பெண் ஆடி மாதத்தில் கருவடைந்துவிட்டால் இவளுக்கு சித்திரை மாதம் குழந்தை பிறந்தாலும் தாங்கும் சக்தி சிறப்பாக இருந்தது. இதைவிட்டு ஒரு மாதத்தில் ஏற்பட்ட கருவை வலிய ஏராளமாக பணம் கொடுத்து அபார்ஷன் செய்து கொண்டாள். கட்டிளம் காளை போல இருந்த பெண் அபார்ஷன் மூலமாக ஏராளமான இரத்தம் வெளியேற்றப்பட்டுவிட்டதனால் சத்து உடலில் குறைந்து ளிட்டது. குறிப்பாக நோயை எதிர்க்கக்கூடிய சத்து குறைந்துவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததினால் மூட்டு வலி வாதம் உள்ளே புகுந்துவிட்டு சிறுக சிறுக முதலில் மூட்டுக்களில் வலி தோன்றும், இதே சாதாரண வலி நாளடைவில் அதிக மூட்டு வலியை உருவாக்கிவிடும். இந்த மூட்டுவலியுடன் ஒவ்வொரு மூட்டுக்களிலும் வீக்கம் ஏற்பட்டு வருகின்றது. கருப்பை நோய்களுக்கும் மூட்டு வலிக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை நான் இங்கு விளக்கிக் கொண்டு இருக்கிறேன். இதனால் கருப்பை நோய் வராமல் இருக்க முன் எச்சரிக்கையுடன் வருமுன் காப்பது போல கருப்பை நோய் ஏற்பட்ட உடன் நல்ல லேடி டாக்டரிடம் காட்டி அதற்குரிய மருந்து மாத்திரைகளை முறையாக பத்தியத்துடன் இருந்து சாப்பிட வேண்டும்.

 

இரத்தப் போக்கு அதிகம் போவதினால்தான் மூட்டு வலி வருகின்றது என்பது உண்மை. இதைவிட ஒவ்வொரு மாதமும் முறையாக தூரம் ஆகவில்லையென்றாலும் மூட்டு வலி ஏற்படும்.

 

இன்றைய இளம்பெண்களுக்கு உடலிலே சத்து இல்லாததினால் தூரம் முறையாகப் போவதில்லை. டேங்கில் தண்ணீர் இருந்தால்தான் பைப்பில் தண்ணீர் வரும். உடலில் சத்து இல்லாததினால் கண்டும் காணாமல் தூரம் வெளிப்படுவதில்லை. கண்ணில் கூட சிலருக்கு தெரிவதில்லை. இளம்பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. சூதக வலி ஏற்படுகிறது. சூதகம் தேங்கி தங்கி வெளிப்படாததினால் சூதக வலி டைஸ்மெநோரியா ஏற்படுகிறது. இந்த சூதக வாயு ஒவ்வொரு மாதமும் தூரம் ஆகும்படி  செய்து வெளியேற்றினால் மூட்டுகளில் உள்ள வலி தானாகவே குறைந்துவிடும்.

இதனால் ஒரு மூட்டு வலி பெண் நோயாளி எங்களிடம் வந்தால் உடனே வைத்தியம் செய்வதில்லை. அதற்கு பதிலாக அவர்களுடைய பழைய நடவடிக்கைகள் என்ன நோயினால் இதற்கு முன்பு பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டார்கள்? என்ன மருந்து சாப்பிட்டார்கள். அவளுடைய பழக்கவழக்கங்கள் உணவு பழக்கவழக்கங்கள் கெட்ட பழக்க வழக்கங்கள் இவைகளை எல்லாம் சேகரித்து அவளுடைய சரித்திரத்தில் அவள் நடந்து வந்த பருவத்தில் எந்த இடத்தில் கோளாறு இருக்கிறது என்று தெரிந்து ஆராய்ந்து அவளுடைய இரத்தம், மூத்திரம், எக்ஸ்ரே இவைகள் அனைத்தும் தெரிந்து கொண்ட பின்புதான் நோய்க்கு மருந்து அளிப்பேன். மருந்து தொடங்க எப்படி ஐந்து நாள் ஆகிவிடும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டால் கண்டிப்பாக இனிப்பு வகையான உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது. அரிசி உணவுகளை குறைத்து ராகி, கோதுமை இவைகளை உணவில் முடிந்தவரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீரழிவு நோய் ஆணுக்கு இருந்தாலும் சரி, பெண்ணுக்கு இருந்தாலும் சரி. உடலில் சேமித்து வைத்திருக்கும் சக்தியை அடிக்கடி இழக்கக் கூடாது.

சக்தியை சேமித்து சேர்த்து வைத்திருக்க வேண்டும். நல்ல மன நிம்மதியுடன் இரவில் நன்றாக தூங்க வேண்டும். போதும் என்ற மன நிறைவுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதிக கவலையுடன் இருக்கவே கூடாது. ஏமாற்றம் தோல்வி நஷ்டம் இவைகள் ஏற்படும்போது இவைகளைப் பற்றி அதே சிந்தனையுடன் சதா காலம் அதையே நினைத்துக் கொண்டு இருக்கக்கூடாது.

 

இரவில் அதிக மூத்திரம் வெளியேற்றாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.நீரழிவு நோய் மூத்திரத்திலும், நீரழிவு நோய் இரத்தத்திலும் பாதிக்கப்படும் நிலையில், இந்த நோய் தீவிரம் அடையும்போது நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறையும்போது மூட்டுகளில் வலி சாதாரணமாக ஏற்படுகிறது. இந்த சாதாரண வலியானது தீவிரம் அடைந்து மூட்டுக்களில் அதிக வேதனையுடன் வீக்கமும் தோன்றுகிறது.

 

நீரழிவு நோய் ஏற்படும்போது எப்போதும் மூட்டு வாதம் ஏற்படுவது இயல்பு, இது போலவே இரத்தக் கொதிப்பு நோய் ஏற்படுவதும், இயல்பு. ஒன்றை ஒன்று இணைந்து பிணைந்து சேர்த்து வாழக்கூடிய நிலையை உருவாக்கிக் கொள்வது இயல்பு.

நீரழிவு நோயாளிகளில் நீரழிவு நோய் வந்து இருந்தும், அதைப்பற்றி சிந்திக்காமல் மனஉறுதியுடன் தைரியத்துடன் மனம் தளராத முயற்சியுடன் இருந்தால் மூட்டுவலி நோய் ஒன்றும் செய்யாது.

 

நீரழிவு நோய் ஐயோ வந்துவிட்டது என்று பயந்தால்தான் இந்த நோய் தீவிரமாகிவிடும். இந்த நோய் தீவிரம் அடையும். நீரழிவு நோயை கண்டு கொள்ளாமல் இருந்தால், கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தால் பயப்படவே தேவை இல்லை. ஐயோ பயம் என்று பயந்தால்தான் நோய் தீவிரம் அடையும். நோய் தீவிரம் அடைந்து பெரும் கஷ்டத்தை உண்டாக்கும்.

 

நீரழிவு நோயை குணமாக்க முடியாது. நீரழிவு நோயை குணமாக்கிக் நான் காட்டுகிறேன் என்று மருத்துவர்கள் சாதாரணமாக சபதம் செய்பவர்களும் உண்டு.நீரழிவு நோயை சாதாரண முறையில் கட்டுப்படுத்தலாம். அவ்வளவுதான். முழுமையாக குணமாக்கவே முடியாது. நீரழிவு நோயை ஒரு வருடம், இரண்டு வருடம் நோய் வராத நிலையில் சற்று தடுத்து நிறுத்தலாம். இதை வேண்டுமென்றால் செய்யலாம்.


நோயாளிகள் இதை சிந்தித்து, கொண்டு செயல்பட ஆலோசித்து முடிவு நன்கு பலரிடம் வேண்டும்.நீரழிவு நோயாளிள் லட்டு, ஜிலேபி, மைசூர்பா சாப்பிடவே கூடாது.

தினம் காலை, மாலை = வெந்தயம் சாப்பிட்டு தண்னீர் குடிக்கலாம், வெந்தயத்தை பவுடர் செய்து வைத்துக்கொண்டு இதை சாப்பிட்டு அதற்கு மேல் மோர் குடிக்கலாம். வெந்தயத்திற்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இயற்கையான சத்து இருக்கிறது.

நீரழிவு நோயாளி எப்போதும் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். போதும் என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும்.வேண்டும், மேலும் வேண்டும், அதிகம் வேண்டும் என்ற ஆத்திரத்துடன் யார் ஒருவன் பேராசையுடன் வாழ்கின்றானோ, அவன் நீரழிவு நோயுடன் மூட்டு வலி நோயும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டே தீரும்.

மூட்டு வாத நோய் உடனே தோன்றாது. ஏதாவது ஒரு நோய் உடலுக்குள் மறைந்து இருக்கும். இதனை பிடித்து துணை கொண்டு இந்த நோய் பெரிய நோயாக மாறி கஷ்டத்தை உண்டாக்கும். இந்த நோய் வருவது சீக்கிரம் வந்து விடும். இந்த நோய் குணம் அடைய ஆறு மாதங்கள் ஆகும். சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகிவிடும். சிலருக்கு இரண்டு வருடங்கள் கூட ஆகிவிடுகிறது.

எத்தனை நாள் ஆனாலும் ஒரே மருத்துவரை நம்பி பத்தியம் இருந்து தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சக்கரை இரத்தத்தில் அதிகமாய் இருக்கும் போது மூட்டுவலி அதிகமாய் இருக்கும்.

சக்கரை இரத்தத்தில் குறைந்து காணப்படும் போது மூட்டுவலி சற்று குறைவாகவே காணப்படும். மூட்டுவலியைக் கண்டு பயந்து கொண்டால் அது நம்மை பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிவிடும். மூட்டுவலி என்றால் பயப்படக்கூடாது. அதற்கு தீவிரமான சிகிச்சை மேற்கொண்டால் குணமாகிவிடும். மூட்டுவலி என்று தெரிந்து அதற்கு தக்க வைத்தியம் செய்யும் போது அது தீவிரம் அடையாமல் சற்று தாழ்ந்த நிலையில் தன்மையுடன் இருக்கும். மூட்டுவலியை ஒரேயடியாக விட்டுவிட்டால் தான் கடுமையான நோயாக மாறிவிடும். அவ்வப்போது மருத்துவம் செய்து கொண்டால் முன் எச்சரிக்கையுடன் இருந்தால் நோய் முற்றாது. சாதாரண செலவில் எளிதில் குணமாக்கிவிடலாம். புத்தி கூர்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்.